For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பி.எஸ் மாதிரி ஆக ஆசைப்பட்டு சீட் கேட்கும் டீக்கடை ஓனர்கள்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் புதுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிமுகவில் அதிகளவில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் டீக்கடை மற்றும் ஹோட்டல் நடத்தி வருகின்றவர்கள்தானாம்.

குறிப்பாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில் அதில் முக்கால்வாசிப் பேர் டீக்கடைக்காரகள்தானாம்.

Tea shop owners asking seat in Election

அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக பதவி வகிக்கக் கூடிய அதிர்ஷ்டம் பெற்றவர் ஓ.பன்னீர் செல்வம் என்னும் ஓ.பி.எஸ். இதுவரையில் 2 முறை அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

பெரியகுளம் தொகுதியில் டீ மற்றும் ஹோட்டல் நடத்தி வந்த சாதாரண பன்னீர் செல்வம், இன்று தமிழக முதல்வராகும் அளவிற்கு வளர்ந்துள்ளார் கட்சிக்குள். இன்றும் கூடஅவரது டீக்கடை பிசியாகவே இருக்கிறது.

எனவே ஓ.பி.எஸ் போல் முதல்வராக வரமுடியாவிட்டாலும் குறைந்தது எம்.எல்.ஏ பதவியாவது கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு ஆலங்குடி தொகுதியில் டீ கடை நடத்தி வருவோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக காரணம் கூறுகின்றனர்.

English summary
Lot of tea shop and hotel owners asking for seat in ADMK in Coming election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X