For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த கொடுமையை எங்க போயி சொல்றது?.. குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்!

தாயின் கள்ளக்காதலால் 4 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்!- வீடியோ

    விழுப்புரம்: இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? கள்ளக்காதல் என்றாலே தனக்கு யார் இடைஞ்சலாக வந்தாலும் அவர்களை தீர்த்து கட்டிவிட்டுத்தான் மறுவேலைபார்க்கும் போல. அது பெற்ற பிள்ளைகளே ஆனாலும். கள்ளக்காதலுக்காக பிள்ளைகளின் வாழ்வை சிதைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டத்திலும் நடந்துள்ளது.

    விழுப்புரம் அடுத்துள்ளது தெலிகிராமம். இங்கு கணவன்-மனைவி அவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. திடீரென குடும்பத்தில் அந்த பெண்ணின் ரூபத்தில் புயல் வீச தொடங்கியது. அந்த பெண்ணுக்கும், விழுப்புரம் அடுத்துள்ள வளவனூர் பகுதியில் வசித்து வரும் தணிகைவேல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த தணிகைவேல் ஒரு பட்டதாரி ஆசிரியராம்.

     கள்ளக்காதலனுடன் குடித்தனம்

    கள்ளக்காதலனுடன் குடித்தனம்

    மனைவியின் கள்ளக்காதலை கண்ட கணவர், அதிர்ச்சியடைந்து அவரை வெறுத்தே விட்டார். இதனால் மூத்த மகனை மட்டும் தன்னுடன் அழைத்து கொண்டு தனியாக பிரிந்தும் சென்று போய்விட்டார். கணவர் இப்படி குடும்பத்தை விட்டு போய்விட்டாரே என்று துளியும் வருத்தமோ, கவலையோ படாத அந்த பெண்ணோ, 2-வது மகன் மற்றும் 3-வது மகளை அழைத்து கொண்டு, கள்ளக்காதலன் தணிகைவேலுவுடன் வளவனூருக்கே போய் அங்கேயே தங்கி குடும்பம் நடத்த துவங்கிவிட்டார். இதில் 3-வது மகளுக்கு 4 வயதுதான் ஆகிறது.

     தாயின் பயங்கரம்

    தாயின் பயங்கரம்

    இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி 4 வயது மகளுக்கு திடீரென்று உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த சிறுமியை தணிகைவேல் அழைத்து சென்றார். அப்போது, சிறுமியின் உடலை பரிசோதித்த டாக்டர், சில சந்தேகங்களை கேட்டார். ஆனால் அதற்கு தணிகைவேல் முழுப்பலான பதிலையே தந்துள்ளார். இதனால் சந்தேகம் மேலும் பலப்படவே, வளவனூர் போலீசாரிடம் டாக்டர் விஷயத்தை கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் ஆசிரியர் தணிகைவேலுவிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த 4 வயது சிறுமியை தணிகைவேல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரியவந்தது. இதைவிட பயங்கரம், தணிகைவேலுவின் இந்த செயலுக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதும் வெளிப்பட்டது.

     அரசு காப்பகத்தில் குழந்தைகள்

    அரசு காப்பகத்தில் குழந்தைகள்

    இதையடுத்து, சிறுமியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தாய் மற்றும் தணிகைவேல் மீது போக்சா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தணிகைவேல் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயும் விரைவில் சிறை போகவுள்ளார். சிறுமிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் இரண்டு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     திருமணங்களின் பலன் என்ன?

    திருமணங்களின் பலன் என்ன?

    நாட்டில் கள்ளக்காதலை தடுத்து நிறுத்த வழி தெரியவில்லை. கள்ளக்காதலுக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், இதுபோன்ற அவல நிலைக்கு காரணம் அவரவர் மனமே. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாய் தினம் தினம் ஆயிரமாயிரம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இப்போது அது பிஞ்சுகளையும் தாக்கி வருகிறது. பெரும்பாலான கள்ளக்காதல்கள் ஆபாசம், அசிங்கம், சமுதாய சீர்கேடு என்பனவற்றையும் தாண்டி வன்முறையிலேயே சென்று முடிவடைகிறது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுதான் இந்த கள்ளக்காதலுக்கும் ஒரே வழி. இல்லாவிட்டால் ஆணும்-பெண்ணும் திருமணம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

    English summary
    Teacher arrested for sexually raping a 4 year old girl in Villupuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X