ஒற்றுமையின் வலிமை... ஃபேஸ்புக்கில் வாவ் சொல்லவைக்கும் வீடியோ
சென்னை: சிறு வயதில் ஒற்றுமையின் வலிமை பற்றி 'நான்கு காளைகளும் ஒரு சிங்கமும்' கதை படித்திருப்போம். அதைத்தான் இன்னமும் கூறி வருகிறோம்.
வேடனின் வலையில் இருந்து தப்பிக்கும் பறவைகளும், அந்த பறவைகளுக்கு உதவி செய்யும் எலி கதையும் பள்ளியில் ஆசிரியர்கள கூற கேட்டிருப்போம்.
ஆனால் கடற்கரையில் ஓடும் நண்டுகளும், சிற்றுயிரான எரும்பும், பனி பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின்களும் எப்படி ஒற்றுமையாக இருந்து தங்களை தாக்க வரும் எதிரியிடம் இருந்து தப்புகின்றன என்பதை அழகாக கூறுகிறது இந்த வீடியோ.
ஒரே குழு உணர்வோடு செய்யும் எந்த வேலையும் சிறப்பாகவே இருக்கும் என்பதற்கும் இந்த வீடியோ எடுத்துக்காட்டு.
நான் இந்த வீடியோவைப் பற்றி எழுதும் வரை ஃபேஸ்புக்கில் இதனை 86 லட்சத்து 45 ஐந்தாயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
ஒரு நிறுவனத்தில் டீம் ஒர்க்காக செய்யும் வேலையும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கிறது இந்த வீடியோ.
பெற்றோர்களே, ஆசிரியைகளே, மனிதவள மேலாளர்களே இனி ஒற்றுமைக்கும், குழு உணர்வுக்கும் கதை சொல்லும் போது காளை மட்டுமல்ல நண்டு கதையும், எறும்பு கதையும் குட்டீஸ்களுக்கு கூறலாமே...