For Daily Alerts
Just In
திடீர் இயந்திரக் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது ஹைதராபாத் விமானம் - 62 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக தரை இறக்கப் பட்டது. இதனால், 62 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணி அளவில் ஹைதராபாத்திற்கு விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் வானில் பயணம் செய்த விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.
இதனால் உடனடியாக அவ்விமானம் மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது.
இயந்திரக் கோளாறு உடனடியாக கண்டறியப்பட்டதால், அந்த விமானத்தில் பயணம் செய்த 62 பயணிகளும் உயிர் தப்பினர்.
Comments
chennai hyderabad flight technical problem சென்னை ஹைதராபாத் விமானம் பயணிகள் உயிர் தப்பினர் தரையிறக்கம்
English summary
The Chennai - Hyderabad flight was landed immediately after take off because of some technical problem. Luckily 62 passengers without any issues.
Story first published: Tuesday, December 9, 2014, 8:37 [IST]