For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் போராட்டம்.. ஊதிய உயர்வு கோரி திடீர் தர்ணா

திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: தற்காலிக பணியாளர்களை நிரந்தப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோயில் பணியாளர்கள் கோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள டாடாபாத் பகுதியில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

temple workers dharna protest in kovai

தங்களது கோரிக்கைகள் குறித்து பல முறை மனு அளித்தும் அறநிலையத் துறை ஆணையர் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஊதிய முரண்பாடுகளை அகற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

English summary
The temple employees were involved in the dharna protest demanding wage increases in Kovai. They allege that the Commissioner of the Department of Justice, who has been petitioned several times on their demands, acted negligently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X