பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள், ஸ்டாலின், வைகோ மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் மர
சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரரும் பார்வர்டுபிளாக் கட்சித் தலைவருமாக திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது.
பால்குடம்
பசும்பொன்னில் கடந்த 28-ந் தேதி ஆன்மிக விழா, 29-ந் தேதி அரசியல் விழா நடைபெற்றது. அப்போது பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.
அமைச்சர்கள்
இன்று காலை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 தமிழக அமைச்சர்கள் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ஸ்டாலின், வைகோ
மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ஆளில்லா விமானம்
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையை முன்னிட்டு முதல் முறையாக ஆளில்லா விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.