தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்போருக்கு மாவட் ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய் அருகில் குடியிருப்போர் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆற்றுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய் அருகில் குடியிருப்போர் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனமழையால் நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கன மழை நீடிக்கும் பட்சத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.