For Daily Alerts
Just In
கருணாநிதி தலைமையில் பிப்.1ல் டெசோ கூட்டம்!
சென்னை: சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பிப்ரவரி 1ந் தேதி டெசோ கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது. இந்நிலையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 1-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இதில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Eelam Supporters' Organisation (Teso), convened a meeting of Teso members on Feb 1
Story first published: Thursday, January 30, 2014, 15:45 [IST]