பொதுக்குழுவை கூட்டிப் பாருங்க.... தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ எச்சரிக்கை- வீடியோ
பொதுச் செயலாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ் செல்வன் எச்சரித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி: பொதுச் செயலாளர் அனுமதியுடன் துணை பொது செயலாளர் தான் கட்சி
பொதுக்குழுவை கூட்ட முடியும். வேறு யாராவது கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும்
செப்டம்பர் 12ஆம் தேதி கூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கூறிய தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ
பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முமுடியும் என்று அதிமுக கட்சி
விதிகளில் குறிப்பிடப்படுள்ளது.
பொதுசெயலாளார் இல்லாத பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் நான்கில் ஒரு
பங்கு உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு அதனை பொதுச் செயலாளரிடம் காண்பித்து
அவர் அனுமதித்தால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும்.
அதிமுக கட்சி விதிகளுக்கு மாறாக பொதுக்குழுவை கூட்டினால் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.