தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதை விரும்பாத தங்கபாலு
புதுக்கோட்டை: த.மா.கா உதயமாக உள்ளது என்று வரும் தகவல் உண்மையானதாக இருக்கக் கூடாது என்று விரும்புவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். சோனியா காந்தியின் தலைமையில் கட்சி வளமாக இருக்கிறது. சோனியா, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையிலான காங்கிரஸே உண்மையானது. காமராஜரின் படம் முன்பு இருந்தது, தற்போதும் இருக்கிறது, நாளையும் இருக்கும்.
நான் மூப்பனார் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். த.மா.கா. உதயமாக உள்ளது என்ற தகவலில் உண்மை இருக்க கூடாது என்று விரும்புகிறேன். கோஷ்டி பூசல் அனைத்து கட்சிகளிலும் தான் உள்ளது என்றார்.