ரூபாய் நோட்டு தடை.. வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியல் நேற்று வெளியிடப்பட்டன.
அதன்படி ரூபாய் நோட்டு தடை - வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்? என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்
பாஜகவுக்கு வாக்களிப்பேன் - 23%
பாஜக-விற்கு எதிராக வாக்களிப்பேன்- 12%
ஓட்டுக்கான முடிவு அல்ல - 65%
500,1000 ரூபாய் நோட்டு தடையால் கருப்பு பணம் ஒழியுமா..? என்ற கேள்விக்கு பாதி கருப்பு பணம் ஒழியும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாதி கருப்பு பணம் ஒழியும் - 47%
முழுமையாக ஒழியும் - 32%
ஒழியாது - 15%
கருத்து இல்லை -6%
500,1000 ரூபாய் நோட்டு தடையால் மக்களுக்கு சிரமமா..? என்ற கேள்விக்கு குறுகிய கால சிரமம், நீண்ட கால ஆதாயம் என 60 சதவீதம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
குறுகிய கால சிரமம், நீண்ட கால ஆதாயம் -60%
தேவையற்ற சிரமம் - 34%
கருத்து இல்லை - 6%
மத்திய அரசின் முடிவு பற்றிய உங்கள் பார்வை? என்ற கேள்விக்கு அனைவருக்கும் அதிர்சிச என 46 சதவீதம் பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் அதிர்ச்சி - 46%
சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் - 45%
கருத்து இல்லை 9%