அதிமுக செயற்குழு கூட்டம் 'தவிர்க்க முடியாத காரணங்களால்' ஒத்திவைப்பு
Recommended Video
சென்னை: வரும் 20ம் தேதி நடைபெறவிருந்த, அதிமுக செயற்குழு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக செயற்குழு 20ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.
திமுகவுக்குள் அழகிரி பேட்டியால் ஏற்பட்ட பதற்றம், டிடிவி தினகரன் எழுச்சி, ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சி சட்டவிதிகளில் திருத்தம் ஏற்படுத்தியது செல்லாது என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். 4 வாரத்திற்குள் இதை முடிவுக்கு கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இறுதிக்கட்ட விசாரணை நடந்துக்கொண்டு வருகிறது. இதனிடையேதான் செயற்குழு கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்புவிடுத்திருந்தது.
இந்த நிலையில், 20ம் நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே அனுப்பட்ட, அழைப்பிதழுடன் பங்கேற்க வேண்டும். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும்.