மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்.. தமிழிசை ஆவேசம்
மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி பற்றி எதிர்க்கட்சியினருக்கு கவலையில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன நாகரீகமான தலைவர் மோடி என்றும் தமிழிசை புகழாரம் சூட்டினார். பிரதமர் வருகையை எதிர்தது தவறு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
எதை செய்தாலும் மோடியின் பெருமையை குறைக்க முடியாது என்றும் அவர் கூறினார். பணத்திற்காக சிலர் ஹேஷ்டேக் போட்டதால் மோடி பெருமை குறையாது என்றும் தமிழிசை கூறினார்.
மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார். புதிய இந்தியா ராக்கெட் விடுகிறது, தமிழகத்தில் பலூன் விடுகிறார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.