தீக்குளித்து இறந்த மூவரின் உடல்களை ஒப்படைத்த போலீஸ்.. "கேஸ்" போடுவோம் என குடும்பத்தாருக்கு மிரட்டல்!
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தீக்குளித்தார். சமூகவலைதளங்களில் வெளியான இந்தக் காட்சி பார்ப்போரின் நெஞ்சங்களை பதற வைத்தது.
Recommended Video
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசக்கி முத்துவின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் 5 வயது பெண் குழந்தை மதி சரண்யா மற்றும் 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா ஆகிய மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இசக்கி முத்துவுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்கப்போவதில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் போலீசார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடல்களை வாங்காவிட்டால் வழக்குப்பதிவு செய்வோட் என மிரட்டி வாங்கவைத்துள்ளனர்.