திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை-வாணியம்பாடியில் சோகம்
திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video
வாணியம்பாடி: திருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம் என்பவரது மகள் மீனா, 20. இவருக்கும், குரிசிலாப்பட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கோவிந்தராஜ் 25 என்பவருக்கும் நேற்று முன்தினம் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அத்துடன் சம்பிரதாயப்படி, தம்பதிகள் மணமகள் வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், மாப்பிள்ளை கோவிந்தராஜ் நேற்று மாலை வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மணப்பெண் மீனா அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு யாரும் இல்லை என தெரிகிறது.
அப்போது மீனா திடீரென்று, யுவராஜ் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த நேரத்தில் குடும்பத்தினர் மீனாவை தேடி வந்தநிலையில், யுவராஜ் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விரைந்து வந்து
மீனாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே நாளில் ஏன் மீனா தற்கொலை செய்துகொண்டார்? இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையா? வேறு யாரையாவது மீனா விரும்பினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் திருமணமாகி ஒரே நாளில் 20 வயது இளம்பெண் இறந்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.