மாங்காடு அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்.. 4 மணிநேரத்தில் கார் மீட்பு.. ஒருவர் கைது
கால்டாக்சி டிரைவரை தாக்கி கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது.
Recommended Video
பூந்தமல்லி: மாங்காடு அருகே பரபரப்பு.. கால்டாக்சி டிரைவர் தாக்கி கார் கடத்தல்.. 4 மணி நேரத்தில் துரத்தி துரத்தி சென்று விரட்டி சென்று 4மணி நேரத்தில் கார் மீட்பு. ஒருவர் கைது.
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், இவர் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இன்று அதிகாலை இவரது காரை ஒரு நபர் புக் செய்தார். அதனை தொடர்ந்து வாடிக்கையாளரை அழைத்து செல்ல காரை மாங்காடு அடுத்த பரணிபுத்தூருக்கு காரை எடுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வாடிக்கையாளர் வராததால் அதனை கேன்சல் செய்து விட்டார். பின்னர் மதுரவாயல் - தாம்பரம் செல்லும் பைபாசின் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கியதுடன், அவரது காரையும் எடுத்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த செல்வம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். மாங்காடு, குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையையும் உடனடியாக தொடங்கினர்.
அதில், காரில் இருந்த டவர் லொகேஷனில், கார், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லொகேஷன் இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். காரின் அருகே போலீசார் கண்டதும் அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர். உடனே போலீசார் அந்த காரை துரத்தி பிடிக்க தொடங்கினர் சென்றனர்.
இதையடுத்து காரை ஓரமாக நிறுத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி செல்ல முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் மாங்காட்டை சேர்ந்த அப்துல் அமீது 21, என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரை போலீசார் மீட்டனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 4 மணி நேரத்தில் கடத்தப்பட்ட காரை போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.