For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் - மே 7-ல் அடிக்கல் நாட்டு விழா!

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

The foundation laying ceremony on May 7 to set up a memorial to Jayalalitha

இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுகிறது.

English summary
The foundation laying ceremony will be held on May 7 to set up a memorial to Jayalalitha in Chennai Marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X