வாழ்க்கையில் இனி ரயிலில் ஏறவே மாட்டோம்.. கத்தியுடன் திரிந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்டு கதறல்!
ரயிலில் கத்தியுடன் ஏறி மிரட்டிய கல்லூரி மாணவர்கள் தங்களை மன்னித்து விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை: ரயிலில் கத்தியுடன் ஏறி மிரட்டிய கல்லூரி மாணவர்கள் தங்களை மன்னித்து விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் - சென்னை இடையேயான புறநகர் ரயில் வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். வழக்கமாக பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடி இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை - ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தியபடி பயணம் செய்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கத்தியுடன் திரிந்த 4 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார் 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். அந்த 4 பேரும் இனி வாழ்க்கையில் ரயிலில் ஏறவே மாட்டோம் எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கதறும் காட்சி வெளியாகியுள்ளது.
வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம்: கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க மன்னிப்பு #Arrest #Student pic.twitter.com/ghZgU27Njz
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 10, 2017