For Daily Alerts
Just In
கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
கொசஸ்தலை ஆறு வட சென்னையில் இருக்கும் பல மக்களுக்கு முக்கிய குடிநீர் மூலமாக இருந்தது. ஆனால் தற்போது கொசஸ்தலை ஆறு சாம்பல் கழிவுகளாலும், அனல் மின் நிலைய குப்பைகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அதன்படி கொசஸ்தலை ஆற்றை சொந்த செலவில் தூர்வார வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனை குறைய வாய்ப்பு இருக்கிறது.
Comments
English summary
The Green Tribunal ordered North Chennai Thermal Power Plant to clean Kosasthalaiyar.
Story first published: Thursday, December 21, 2017, 21:25 [IST]