For Daily Alerts
Just In
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை.. போராட்டம் தீவிரமடைந்ததால் நடவடிக்கை
கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்: அரசுக் கலைக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கட்டண உயர்வை குறைத்துள்ள நிலையில் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 105 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் மேலும் தீவிரமாவதைத் தடுக்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The indefinite vacation has been announced for Kumbakonam Government Arts College. The holidays announced to prevent students protest further.
Story first published: Tuesday, January 30, 2018, 20:42 [IST]