For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆபரேஷன் செய்யும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியை அடித்ததில் பலத்த காயமடைந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியை அடித்ததில் பலத்த காயமடைந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மதிஷா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வகுப்பறையில் ஆசிரியையின் பாடம் தொடர்பான கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை சரமாரியாக பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் காலில் பலத்த காயமடைந்த அந்த மாணவிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியை ஒருவர் மாணவியை ஆபரேஷன் செய்யும் அளவுக்கு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
A private school teacher beatena student for not answering. The injured student gets surgery. This incindent caused a great stir.