மொத்தம் 76 இடங்கள்.. கிருஷ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. நிறுவனர் குமாரசாமி கைது
கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
Recommended Video
கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் ..
கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனம் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது.
தொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர்.கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது.
மொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கைது செய்யப்பட்டார். அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு போலி நிறுவனங்கள் , போலி பொருட்கள் தயாரித்து விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.