For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த காற்றழுத்தம் புயலானது.. சாகர் என பெயர்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. எச்சரிக்கை!

ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குறைந்த காற்றழுத்தம் புயலானது-வானிலை ஆய்வு மையம்-வீடியோ

    சென்னை: ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும்.

    The low depression has converted as cyclone near Yedan: Chennai Meteorological center

    ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. சாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால், தமிழகத்திற்கு ஏதும் பாதிப்பில்லை.

    புயலானது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து செல்ல கூடும். எனவே தென்மேற்கு அரபிக் கடலில் ஏமன் ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் இரு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், சாத்தூர் பகுதிகளில் 5 செ.மீ மழையும், வாழப்பாடி மற்றும் ஆண்டிப்பட்டியில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    English summary
    Chennai Meteorological center has said that The low depression has converted as cyclone near Yedan. Tamilnadu will not be affected by this cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X