தலித் இளைஞர் படுகொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கவுசல்யா-சங்கர் காதல் ஜோடிகள் மூன்று பேர் கொண்ட கும்பலால் நேற்று மதியம் நடுரோட்டில் சரமாரி அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் இளைஞர் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார், கவுசல்யா தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சாதிய ஆணவக் கொலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரத்திற்குள் விசாரணை நடத்தி பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொலை தாழ்த்பட்டோரின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications