For Quick Alerts
For Daily Alerts
Just In
நடிகர் தனுஷுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை: நடிகர் தனுசுக்கு எதிராக மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷ் தங்களது மகன், பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து தனுஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்திருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரி, அந்த தம்பதி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த ராஜமாணிக்கம் தம்பதி, இது விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார்.
Comments
English summary
The Madurai branch dismissed the case following the couple's case against actor Dhanush
Story first published: Friday, March 23, 2018, 15:08 [IST]