நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்!
நாகை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: நாகை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செழுதூரைச் சேர்ந்த மீனவர்கள் கந்தவேல், முருகானந்தம், தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆறுகாட்டுத்துறை அருகே மீனவர்கள் மூன்று பேரும் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் கந்தவேல், முருகானந்தம், தமிழ்ச்செல்வன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
[30 வருட வழக்கு.. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா, கூடாதா?.. கடந்து வந்த பாதை! ]
இதில் மீனவர் தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார், இதையடுத்து உயிர்பிழைத்தால் போதும் என மீனவர்கள் கரை திரும்பினர்.
தாக்குதலில் காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.