For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது!

பலியானோரின் உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது.

Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... துணை ராணுவம் விரைகிறது

    தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியோனாரின் உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மக்கள் எழுச்சியின்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அப்பாவி மக்கள் தலை, நெஞ்சு பகுதிகளில் குறி வைத்து சுடப்பட்டு உயிரிழந்துள்ளதால், அரசு சார்பில் உடற்கூறு நடத்தாமல் தனியார் மருத்துவர்களை கொண்டு நடத்த வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவம் குறித்து சர்ச்சை நிலவுவதால், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகளும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

    The process of cleaning the body has begun

    அதனை தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியோனாரின் உடல்களை பதப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதப்படுத்தும் அறையிலிருந்த மற்ற சடலங்கள் அனைத்தும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    English summary
    The process of cleaning the bodies of the deceased has been underway. Tuticorin Government Hospital is in the process of processing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X