For Daily Alerts
Just In
மானிய விலையில் ஸ்கூட்டி: ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மானிய விலை ஸ்கூட்டிகளை வரும் 24ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மானிய விலை ஸ்கூட்டிகளை பெற ஓட்டுநர் உரிமம் அவசியம் என்பதால் ஆர்டிஓ அலுவலகங்களில் பெண்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனா ஆர்டிஓ அலுவலகங்கள் காலை முதலே கூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற வசதியாக ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The RTO office in Tamil Nadu will be working tomorrow. Many women have applied for license to get two wheeler at subsidy price.
Story first published: Friday, February 2, 2018, 19:31 [IST]