அடக்கொடுமையே.. ஒவ்வொரு தீர்ப்பின்போதும், தமிழகத்திற்கான காவிரி பங்கு குறைந்துள்ளதே கவனித்தீர்களா?
Recommended Video
சென்னை: காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான பங்கு என்பது காலாகாலத்திற்கும் குறைந்து கொண்டே வருகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பால், நீர்ப்பாசன பரப்பு அதிகரித்துள்ள நிலையில், மழை பொழிவு குறைந்துள்ள இந்த காலகட்டத்தில், நீர் வரத்து குறைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் நடுவேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக காவிரி நடுவர்மன்றம் என்ற ஒன்று, அமைக்கப்பட்டது.
நடுவர்மன்றம்
1990 ஜூன் 2ல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர் மன்றத்தில் கர்நாடகா-465, தமிழகம்- 566, கேரளா- 99.8, புதுச்சேரி- 9.3 டி.எம்.சி. தண்ணீர் கேட்டன. 1991ம் ஆண்டு, ஜூன் 25ம் தேதி, காவிரி நடுவர்மன்றம், இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
தண்ணீர் குறைந்தது
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
தமிழகம் மெத்தனம்
நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு மற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவை படிப்படியாக தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்துள்ளன. உரிய சட்ட போராட்டங்களை தமிழக அரசு முன்னெடுக்காதது இப்படி தமிழகம் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க காரணம் என தெரிகிறது.