மிதந்து வந்த பெண்ணின் கால்கள்.. மேலே பார்த்தால்...!
Recommended Video
கோவை: குரூரம் இவ்வளவு கொடூரமானதா? வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு கொலை நடந்திருக்குமா என தெரியவில்லை.
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளம் உள்ளது. கடந்த 25-ம் தேதி இந்த குளத்தில் நிர்வாண நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மிதந்தது கண்டு அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது கோவை மாநகர காவல்துறையே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
கழுத்து, கை, வயிறு இல்லை
அந்த சடலம் முழுமையாக இல்லை. கழுத்தும், இரு கைகளும் வெட்டப்பட்டிருந்தன. வயிறு, இடுப்பு, இரு கால்களையும் காணவில்லை. கழுத்து, கைகள் மிக மிக கூர்மையான ஆயுதத்தால் துல்லியமாக வெட்டப்பட்டிருந்தது.
அரிசி மூட்டைக்குள் தலை
தலை முதல் இடுப்பு வரை உள்ள பகுதி தனியாக ஒரு ரேஷன் அரிசி மூட்டைக்குள் குளத்தினுள் இருந்தது. சடலத்தின் வயிற்று பகுதியில் இருந்த குடல் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்டு 4 நாட்களான உடலின் பாகங்கள். ஆனால் அந்த பெண்ணின் கால்களை மட்டும் காணவில்லை. கால்கள் வேறு ஏதேனும் குளத்தில் இருக்கிறதா என அந்த பகுதியில் உள்ள குளத்தினையே ஆராய்ந்து எடுத்தனர். மீன் பிடிக்கும் வலைகளை கொண்டும் துழாவி எடுத்தனர். கால்கள் கிடைக்கவேயில்லை.
தடயங்கள் கிடைக்காமல் திணறல்
இதுவரை கொலையுண்ட பெண் யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தடயங்கள் கிடைக்காத காரணத்தினால் காணாமல் போன பெண்களின் புகைப்படங்களை வைத்தும் விசாரணை ஆரம்பமானது.
மிதந்து வந்த கால்கள்
இந்நிலையில் குளத்தில் போலீசார் பெண்ணின் கால்களை தேடி கொண்டிருந்தபோது, இரு கால்களும் குளத்தில் மிதந்து வந்தன. பின்னர் அந்த கால்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனார் அந்த பெண் யார் என்றுதான் இதுவரை கண்டுபிடிக்காமல் திணறி வருகிறது கோவை மாநகர காவல்துறை.