For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படி நிதானமாவா கொள்ளையடிப்பாங்க... பரபர சிசிடிவி வீடியோ - வீடியோ

அந்தியூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் கொள்ளையன் ஒருவன் நிதானமாக கடைக்குள் புகுந்து பணமெடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு அந்தியூரில் மெடிக்கல் ஷாப்பில் ஒரு கொள்ளையன் நூதனமாகப் புகுந்து அங்கிருக்கும் பையில் பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெரிய கடைகள் என்றில்லாமல் தற்போது பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமிரக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் நமக்குத் தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் எந்திர போலீசாக உருவாகியுள்ளது.

 A theft entered into a medical shop and looted money in Anthiyur

அந்தியூரில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் ஒருவர் கடையின் ஷட்டரைத் திறந்து, பூட்டி விடுகிறார். பிறகு டார்ச் லைட்டை ஆன் செய்து, கடை மேசை ட்ராயரில் இருக்கும் பணப்பையை எடுக்கிறார்.

அந்தப் பையில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து மெதுவாக எண்ணுகிறார். அப்படி எண்ணும்போது வாயில் டார்ச் லைட்டை கவ்வியிருக்கிறார். பிறகு பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். அவர் ஒரு 40 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார்.

இத்தனை நிதானமாக பணத்தைக் கொள்ளையடித்தவர் கடைசி வரை அங்கு சிசிடிவி கேமிரா இருப்பதையே பார்க்கவில்லை என்பதுதான் ஹைலைட்.

English summary
A theft entered into a medical shop and looted money. All these recorded in a CCTV camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X