இனி டிஜிட்டலில் பார்க்கலாம் தீக்கதிரை!
சென்னை: தீக்கதிர் நாளிதழின் டிஜிட்டல் எடிசன் தொடக்க விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.
23-03-2016 புதன்கிழமை காலை 11 மணி அளவில், தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இதுதொடர்பான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் விடுதலைப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிச தலைவருமான என்.சங்கரய்யா டிஜிட்டல் எடிசனை தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் அச்சாகி வெளியாகிறது தீக்கதிர் நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.