அவரு காமெடி பீசுங்க.. மிரளுவதற்கெல்லாம் அவர் வொர்த்தே இல்லே... புல்லட் ஊர்காரர்கள்
Recommended Video
தேனி: புல்லட் நாகராஜனை அவரது ஊர்க்காரர்கள் காமெடி பீசு என்று கூறியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996-ஆம் ஆண்டு முதல் 71 வழக்குகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது.
இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் பெண் அதிகாரிகளையும் ஆட்சியர், தேனி மாவட்ட எஸ்பியையும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டலோ மிரட்டல்
பெண் அதிகாரிகளை பில்லா தாதா ரேஞ்சுக்கு புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார். இவர் மிரட்டுவதை கேட்டால் நமக்கே ஒரு ஆக்ஷன் படம் பார்ப்பது போன்ற ஃபீல் ஏற்படுகிறது.
மக்கள் கிண்டல்
இதுகுறித்து அவரது கிராம மக்கள் கூறுகையில் புல்லட் நாகராஜன் மிரட்டலை பார்த்து அச்சப்படுவதற்கு அவர் வொர்த்தே இல்லை. வெறும் காமெடி பீசுதான். நேரில் அவரது தோற்றத்தை பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
சாது போல் காட்சி
சாது போல் காட்சியளிக்கும் புல்லட் பெரிய ரவுடி, தாதாவெல்லாம் இல்லை. அவரை பார்த்தால் சாது போல் இருப்பார். அவர் மீது 71 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்துவிட்டார் என்றனர்.
வில்லன் லுக் இல்லை
இந்நிலையில் புல்லட் நாகராஜன் நேற்றைய தினம் பெரியகுளம் டிஎஸ்பியால் கைது செய்யபட்டார். அவர் பார்ப்பதற்கு ஒல்லியாக காட்சியளித்தார். வில்லன் லுக் துளியும் இல்லை. ஆனால் பேசியது என்னவோ பில்லா வில்லன் ரேஞ்சுக்கு பேசிவிட்டார்.