For Daily Alerts
Just In
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... எச்சரிக்கும் வானிலை மையம்!
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும்,வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
Comments
chennai meteorological center warning rain tamilnadu puducherry சென்னை வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் மழை புதுச்சேரி
English summary
Chennai Meteorological center has said there is a chance of heavy rain in Tamilnadu. Chennai may get rain at night times.