டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ன சொல்கிறார் ஜெயக்குமார்?
டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருவதால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க ஓ.பன்னீர்செல்வம் சதி செய்ததாகவும் இதுதொடர்பாக கடந்த ஆண்டு தன்னை சந்தித்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் டிடிவி தினகரன்.
தினகரன் மீது குற்றச்சாட்டு
ஆனால் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு கட்சியில் இணைவதற்கு முன்பு சந்தித்தது உண்மைதான் ஆனால் அதன் நோக்கம் வேறு என ஒப்புக்கொண்ட ஓபிஎஸ், தனது பெயரை கெடுக்கவே டிடிவி தினகரன் இதுபோன்ற சின்னத்தனமான அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
ஆதாரம் உள்ளது
முன்னதாக அதிமுக- அமமுக ஆகிய இரு கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூது விட்டவர் டிடிவி தினகரன் தான் என அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
சேர்க்கப்படமாட்டார்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தினகரன் இனி ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார் என்றார்.
தினகரனுக்கு வேறு வழியில்லை
மேலும் அவர் பேசியதாவது, தினகரன் வேண்டுமானால் அதிமுகவில் மீண்டும் இணையும் நிலைப்பாட்டை எடுக்கலாம். தினகரனுக்கு வேறு வழியில்லை.
நாம் ஒருவர் நமக்கு ஒருவர்
அமமுக நாம் ஒருவர், நமக்கு ஒருவர் என்ற நிலையில் உள்ளது. அதனால் அதிமுகவில் இணைய தினகரன் விரும்பலாம். ஆனால் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை.
நடக்காத ஒன்று
கட்சியில் தினகரனை சேர்ப்பது என்பது நடக்காத ஒன்று. எழுதி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள சொல்லுங்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
{document1}