Breaking News Live: 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண் விழி அசைவு இல்லை: மருத்துவர்
சென்னை: 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இஇஜி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவரது மூளையின் செயல்பாடு,நரம்பு மற்றும் கண் விழி அசைவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.
அந்த சோதனையின் போது ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்குவரவில்லை என்று மருத்துவர் அருள்செல்வன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம்
முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்தார் அமைச்சர் ரேவண்ணா
Karnataka CM brother, minister HD revanna throws biscuit to flood victims. 😡 pic.twitter.com/Gl6XgbamMr
— Vivek Shetty (@vivekshettym) August 20, 2018
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும்.
— Vijayakant (@iVijayakant) August 20, 2018
கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.#KeralaFloodRelief pic.twitter.com/uEiuMF2wky