எதிரிகளை வேறோடு பிடுங்கி எறிய போயஸ்கார்டனில் மீண்டும் ஒரு புயல்.. ரஜினி நண்பர் நம்பிக்கை!
எதிரிகளை வேறோடு பிடுங்கி எறிய போயஸ்கார்டனில் மீண்டும் ஒரு புயல் மையம் கொண்டிருப்பதாக ரஜினியின் நண்பர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: எதிரிகளை வேறோடு பிடுங்கி எறிய போயஸ்கார்டனில் மையம்கொண்டுள்ள மற்றொரு புயல்தான் ரஜினி என அவரது நண்பர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்களில் 10 பேருக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இன்று நிதியுதவி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரஜினியின் நண்பரான ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.
அதாவது ஆன்மிக அரசியல் என்பது அரசியலில் ஈடுபடுபவர்கள் அவரவரது கடவுளுக்கு கட்டுப்பட்டு நடப்பது என்றார். மேலும் ஆன்மிக அரசியல் என்பது உண்மைக்கு கட்டுப்பட்டு நடப்பது என்றும் அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனைகளை காந்தி போல கையாளுவதில்லை என்ற அவர், காலா போல் கையாளுவார் என்றும் கூறினார். எதிரிகளை வேறோடு பிடுங்கி எறிய போயஸ்கார்டனில் மீண்டும் ஒரு புயல் மையம் கொண்டுள்ளது என்றும் ரஜினியின் நண்பர் ராஜூ கூறினார்.