For Daily Alerts
Just In
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யுமாம்...
வெப்பசலனம் காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பசலனத்தாலும், தென்மேற்கு பருவமழையாலும் மழை பெய்து பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் இன்னும் 4 நாள்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வெப்பசலனம் காரணமாக
மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
English summary
Chennai Metrological centre says that there will rain in some places of TN and Pondy because of convection.
Story first published: Saturday, October 21, 2017, 13:40 [IST]