For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள் - வீடியோ

தேனியில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

தேனி: தேனியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் கொள்ளையர்கள் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியைச் சார்ந்தவர் மாலையம்மாள். மாலையம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

 Thieves robbed a gold chain from a aged woman in Theni

அடுத்து கம்பம் காந்திநகரில் குடியிருக்கும் முருகன் என்பவர் வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்ததும், போலீசார் வந்து வீட்டை சோதனையிட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து வரும் நிலையில் நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது இயல்புதான் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
In Theni and cumbum theft happened in two houses. From an aged woman thieves robbed gold chain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X