For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையான சுவாதி கொலையாளியை வெளியே கொண்டு வருவேன்.... ஜாமீனில் வந்த திலீபன் மகேந்திரன்

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சி: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையாளி யார் என்பதை வெளியே கொண்டு வருவேன் என்று ஜாமீனில் வெளியே வந்த திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார்.

சுவாதி படுகொலை தொடர்பாக பல்வேறு பதிவுகளை ஃபேஸ்புக் போட்டிருந்தார் திலீபன் மகேந்திரன். இதனால் சிலர் அவதூறு பரப்புவதாக அவர் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகாரில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பைத்தியங்களோடு.,...

பைத்தியங்களோடு.,...

என்னுடைய உயிருக்கு ரூ5 லட்சம் விலை வைத்திருந்தனராம். அதனால் என்னை பாதுகாக்க உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று சொல்லி சிறையில் உள்ள பைத்தியங்களோடு என்னை அடைத்தனர்.

ஜாமீனில்...

ஜாமீனில்...

என் உடைகளையும் உருவி வெறும் டவுசருடன் நிறுத்தி கொடுமைப்படுத்தினர். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன்.

வெளியே சொல்வேன்...

வெளியே சொல்வேன்...

சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள். நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன்.

மதக்கலவரம் உருவாக்க சதி

மதக்கலவரம் உருவாக்க சதி

சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள். உண்மையை சொன்ன பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அந்த பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார்.

இவ்வாறு திலீபன் மகேந்திரன் கூறினார்.

English summary
Thileepan Mahendran who got bail in defamation case said that he will reveal the murderer of Swathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X