For Quick Alerts
For Daily Alerts
Just In
Breaking News: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. 23ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு நீதிபதி சத்யநாராயணன் ஒத்தி வைத்தார். 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தினமும் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Newest First Oldest First
Comments
English summary
Third judge M. Sathyanarayanan is going to hear the 18 MLAs disqualification case after split verdict given by two judges.