கருணாநிதி மீண்டு வருவார்.. திருமாவளவன் நம்பிக்கை
Recommended Video
சென்னை: திமுக தலைவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நாடித் துடிப்பு இயல்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவார் என நம்புகிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் தகவல் கிடைத்ததும் அங்கு திருமாவளவன் விரைந்து வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடித் துடிப்பு குறைந்த காரணத்தால் திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நாடித் துடிப்பு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஆற்றல் மிக்க ஒரு தலைவர். எனவே அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது என்ற செய்தி இதை வலுப்படுத்தியுள்ளது என்றார் திருமாவளவன்.