For Daily Alerts
Just In
திருமாவளவனின் புத்தக வெளியீட்டு விழா.. கமல்ஹாசனுக்கு அழைப்பு!
திருமாவளவன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: திருமாவளவன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற பெயரில் புத்தகம் எழுதி இருக்கிறார்.
அவரது இணைய பக்கத்தில் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள் எல்லாம் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இதில் 40க்கும் அதிகமான கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது.
தற்போது அந்த புத்தகத்தை திருமாவளவன் முக்கிய தலைவர்களை சந்தித்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இதற்காக புத்தக வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் அமைப்பாய் திரள்வோம் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Comments
English summary
Thirumavalavan wrote book in the name of "Amaippai Thiralvom''. He invites Kamal for his book release.
Story first published: Thursday, February 15, 2018, 20:49 [IST]