For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுமைவழிச்சாலை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது: திருமாவளவன்

பசுமை வழிச் சாலையை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்த திரூமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை - சேலம் 8 வழி பசுமைவழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thirumavalavan says, 8 ways road plan should not implemented without people permission

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"சென்னை - சேலம் 8 வழி பசுமைவழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலுவான சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
VCK President Thol.Thirumavalavan say, Tamilnadu government should not implemented Chennai – Salem 8 ways road plan with out people permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X