For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ.மரணம் குறித்து 6 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்!
ஜெயலலிதா மரணம் குறித்து 6 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து 6 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து 6 மாதத்தில் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யக் கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Comments
English summary
Thirumavalavan says that the Enquiry commission should be probed within 6 months on Jayalalitha's death. He also ready to face both Parliament and Assembly elections in the same time.
Story first published: Wednesday, September 27, 2017, 10:01 [IST]