கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு.. திருமாவளவன் பளீச்
கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை கேளம்பாக்கத்தில் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சரமாரியாக அவர் விளாசினார்.
மேலும் தான் அரசியல் கட்சி தொடங்குவதும் அரசியலுக்கு வருவதும் உறுதி என்றும் அவர் கூறினார். அவரது இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைக கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை பொறுத்தே அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் கமலின் எண்ணூர் துறைமுக ஆய்வுப் பணியை திருமாவளவன் ஆளாய் பாராட்டினார்.
சினிமாவில் வெற்றி பெற்றதுபோல் அரசியலிலும் கமல் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார். அப்போது கமல் கட்சி தொடங்கியப் பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.