For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடிக்கு தலைவர்கள் செல்ல விடாமல் இழுத்தடிப்பு- விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைப்பு!

சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி செல்லும் விமானம் 1 மணி நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது,

Google Oneindia Tamil News

Recommended Video

    விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைப்பு! | தமிழர் உணர்வை நசுக்க முடியாது- வீடியோ

    தூத்துக்குடி: சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய விமானம் தற்போது 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது. அந்த விமானத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் காத்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடக்கவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirunavukasar, Thirumavalavan awaiting at Chennai airport

    தூத்துக்குடி செல்லும் ரயில்களும் நாசவேலை ஏதேனும் நடந்துவிடுமோ என்று எண்ணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்தும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்துடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான சேவையிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய தூத்துக்குடி கொடூர சம்பவம் தொடர்பாக ஏராளமான கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். அத்துடன். இன்று தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டிருந்தனர்.

    அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை 9.15 மணிக்கு தூத்துக்குடி புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். தூத்துக்குடி புறப்படும் விமானத்திலும் அவர்கள் அமர்ந்துவிட்டனர்.

    ஆனால் விமானம் 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதனால் தலைவர்கள் விமானத்தினுள்ளேயே காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி விமானத்தை நிறுத்தி வைத்து, தலைவர்களை தூத்துக்குடிக்கு செல்லாமல் இழுத்தடிப்பு செய்து வருவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

    English summary
    Tamil Nadu Congress leader Thirunavukasar, Viduthalai Siruthaigal Party leader Thirumavalavan arrived at Chennai airport to reach Thoothukudi at 9.15 am. They also sat on the plane leaving Thoothukudi. But the flight was delayed by 1 hour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X