திருநாவுக்கரசர் பாஜகவுக்கே போகலாம்.. தமிழக காங்கிரஸ் நல்லா இருக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவுக்கே போனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக இருக்கும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சமயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
புதிய ஒப்பந்தத்துக்காக அமைச்சர்களே திருச்சி பாலத்தை உடைத்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. நதிகளை துமர்வார அரசால் இட ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அரசியல்வாதிகள் அபரிகத்து கொள்கின்றனர். அதனால்தான் காவிரி, தாமிரபரணி நீர் கடலில் வீணாக கலக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகியவர். இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட பாஜகவுக்கு செல்லலாம். அங்கு அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு.
இப்போது கூட ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் வாஜ்பாயின் பாஜகவிற்கு சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக இருக்கும்" இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார். என்றார். இளங்கோவனின் இந்த பேச்சு அக்கட்சியினரிடையே தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.