For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த திருநாவுக்கரசர்- எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்தல்!

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் திருநாவுக்கரசர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எம்பிக்கள் வீர வசனம்…திருநாவுக்கரசர் பொளேர்….வீடியோ

    சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது எஸ்.சி, எஸ்.டி. சட்ட திருத்தம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    ஆளுநரின் மாவட்ட ஆய்வுகளை திமுக கடுமையாக எதிர்ப்பு கருப்பு கொடி போராட்டம் நடத்தி வருகிறது. துணைவேந்தர்கள் நியமனம் குறித்தும் குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது.

    Thirunavukkarasar to meet TN Governor

    இந்த நிலையில் திடீரென திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இச்சந்திப்பில் மாவட்ட ஆய்வுகள், துணைவேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் விளக்கம் தந்ததாக ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆளுநர் பன்வாரில் புரோஹித்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், எஸ்சி எஸ்டி சட்ட திருத்தம் தொடர்பாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆளுநரை சந்தித்ததாக கூறினார்.

    மேலும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.

    English summary
    TNCC President Thirunavukkarasar will meet TamilNadu Governor Banwarilal Purohit on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X