என்னா எபெஃக்டு... என்னா எபெஃக்டு... உண்மையிலேயே ‘திருப்புமுனை’ மாநாடு தான்!
சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாடு தொடர்பாக #திருப்புமுனைமாநாடு என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரண்டாகியுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த வேடலில் நேற்று முன்தினம் தேமுதிக மாநாடு நடைபெற்றது. திருப்புமனை மாநாடு என குறிப்பிடப்பட்ட இந்த மாநாட்டில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விருப்பமனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே கூட்டணி பற்றித் தெரிவிக்கப்படும் என விழா மேடையில் கூறிவிட்டார் விஜயகாந்த்.
திடீர் திருப்புமுனை...
இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணியில் ஏதாவது திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட மாநாடு நமத்துப் போனது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்து, விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காலி செய்தனர்.
ஹேஷ்டாக்...
இதனால், இந்த மாநாடு தேமுதிகவிற்கு திருப்புமுனையைத் தந்த மாநாடு என டிவிட்டரில் நெட்டிசன்கள் ஹேஷ்டாக் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால், #திருப்புமுனைமாநாடு
என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.
|
வெளில சொன்னா வெட்கக்கேடு...
நமது கட்சிக்காரர்கள் அனைவரும் கட்டுப்பாடு மிக்கவர்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறிய மறுநாளே, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை சுட்டிக் காட்டியுள்ளார் இவர்.
|
உள்ளோம் கேப்டன்...
மாநாட்டில் விஜயகாந்த் பேசியதை வைத்து இப்படி கமெண்ட் செய்துள்ளார்.
|
திரும்பிப் போங்க மாநாடு...
மாநாட்டின் நிறைவில் தொண்டர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு திரும்பிப் போங்கள் என விஜயகாந்த் அக்கறையாய் கூறியதை, இப்படி அக்குவேறு ஆணி வேராய் கலாய்த்து வருகிறார்கள்.
|
தீயா வேலை செஞ்சிருச்சே...
திருப்புமுனை மாநாட்டின் எபக்ட் தான் உடனடியாக தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா எனக் கூறி, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.